Breaking News

முக்தி தரும் முத்தீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ விழா

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் முத்தீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ விழா விமர்சையாக நடைபெற்றது. பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானின் அருளைப் பெற்றுச் சென்றனர்.

காஞ்சிபுரம் காந்தி சாலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற முக்தி தரும் முத்தீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ விழா நீண்ட நாளுக்குப் பிறகு ஏராளமான பக்தர்கள் தரிசனத்துடன் சிறப்பாக நடைபெற்றது. 

இதில் மூலவர் முக்தீஸ்வரர் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து நந்தி பகவானுக்கு தீபாராதனையும் பிரதோஷ பகவானுக்கு தீபாரதனைகளும் நடைபெற்று ஆலய வளாகத்தில் பிரகாரம் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாக தலைவர் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர். கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


No comments

Thank you for your comments