திருவேற்காடு பேருந்து நிலையத்தை சீர் செய்ய பக்தர்கள் கோரிக்கை
திருவள்ளூர், அக்.19-
திருவள்ளூர் மாவட்டம் தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த கோவில்களில் ஒன்றாக கருதப்படும் திருவேற்காடு கருமாரி அம்மன் கோவிலுக்கு அருகாமையில் உள்ள பேருந்து நிலையம் மிகவும் சேதமடைந்து பாழடைந்து நிலையில் உள்ளது.
இதனால் இங்கு பகல் நேரத்திலும் இரவு நேரத்தில் மது பிரியர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் வெளிமாநிலம் மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். பேருந்து நிலையத்தில் சுற்று சுவர் அமைத்து அதில் தெய்வங்கள் படத்தை வரையவேண்டும், பக்தர்கள் வரும்போது சாந்தமாக இருக்க வேண்டும், மேலும் திருவேற்காடு திருத்தலம் என்பதை பேருந்து நிலையமே அடையாளமாகவேண்டும் என்று திருவேற்காடு கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூறுகின்றனர்.
இந்த திருவேற்காடு கோவிலில் சுற்றியும் நல்ல முறையில் சுகாதார முறையில் இருப்பதாகவும் இந்த பேருந்து நிலையம் மட்டும் இங்கு அலங்கோலமாக இருப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். இந்த பேருந்து நிலையத்தை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்களும் பக்தர்களும் தெரிவித்தனர். இதற்கு நகராட்சி நிர்வாகம் கோயில் நிர்வாகமும் நகரப்பேருந்து துறையை சார்ந்தவர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் பக்த கோடிகளின் கோரிக்கையாகும்.
No comments
Thank you for your comments