Breaking News

ஏரி ஆக்கிரமிப்பு அகற்ற அளவிடும் பணி

விருத்தாசலம்:

வி.சாத்தமங்கலம் அந்தல தோப்பு  ஏரி ஆக்கிரமிப்பு அகற்ற அளவிடும் செய்யும் பணியில் வருவாய் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த வி.சாத்தமங்கலம் தெற்கு இருளர் தெரு அருகே அந்தல தோப்பு  ஏரி சுமார்  ஏழு ஏக்கர் நில பரப்பளவு உள்ளது.

இந்த ஏரியானது அது அதனை சுற்றி உள்ள வயல் வெளிக்கு பயிர் செய்வதற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு கால்நடைகளுக்கு ஏதுவாக இருந்து வந்தது  தற்போது ஒரு ஏக்கர் மட்டும் உள்ளது சுற்றியுள்ள நிலத்தின் உரிமையாளர்கள் ஆக்கிரமிப்பு செய்து நெல் கரும்பு உள்ளிட்ட பயிர்களை செய்து வருகின்றனர்.

வி.சாத்தமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமிகாந்தன் மற்றும் ஊர் பொதுமக்கள் பலமுறை இந்த ஏரியை மீட்டுத்தரக் கோரி மாவட்ட ஆட்சியர் அவர்கள் மற்றும் கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அவர்களிடம் புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை தற்போது அப்பகுதி பொதுமக்கள் அந்தளவுக்கு ஏரியை ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் இருந்து மீட்டு தரக்கோரி சாலை மறியல் செய்யப்போவதாக அறிவித்தனர்

அதனைத் தொடர்ந்து இன்று வருவாய்த்துறையினர் அந்த ஏரியின் பரப்பளவை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர் தொடர்ந்து காவல்துறை உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றப்படும் பின்பு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இந்த ஏரியை தூர் வாரி இப்பகுதியில் உள்ள விளை நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு, கால்நடைகளுக்கு குடிநீருக்கு தட்டுப்பாடு இல்லாமல் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என வி. சாத்தமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி காந்தன் தெரிவித்துள்ளார்

No comments

Thank you for your comments