பாலியல் வழக்கில் சிபிஐ விசாரணை கேட்டு பாதிக்கப்பட்ட இளம்பெண் உயர்நீதிமன்றத்தில் வழக்கு
வழக்கில் எடுத்த நடவடிக்கைகளின் நிலை அறிக்கை மற்றும் பதில் மனு தாக்கல் செய்ய போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே வியன்னூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை பலர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான இளம்பெண் மதுரை உயர்நீதிமன்ற பெஞ்சில் சிபிஐ விசாரணைக்கு வழக்கை மாற்றி உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
🔥Also Read 👍 பேனர்கள் வைப்பதை முழுமையாக தடுக்க விதிகளை வகுக்க வேண்டும்! - உயர்நீதிமன்றம் கடுமையான உத்தரவு
🔥Also Read 👍 விதிகளை மீறும் தி சென்னை சில்க்ஸ்! துணை போகின்றதா மாநகராட்சி..?-பகீர் குற்றச்சாட்டு
அந்த மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலியல் வழக்கில் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும் மனுதாரரை குற்றவாளியாக்கும் முயற்சிகள் நடப்பதாகவும் ஆளும் கட்சி அமைச்சர் மற்றும் முக்கிய பிரமுகர்களின் தலையீடு உள்ளதாகவும் வழக்கில் உள்ள ஆளும் கட்சி நிர்வாகிகளை காப்பாற்றும் பொருட்டு போலீசார் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் மனுதாரரை குற்றவாளியாக்க முயன்று வருவதாகவும், அதனால் ஆளும் கட்சியினரின் தலையீடு இல்லாத மத்திய புலனாய்வு துறையினரின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் முறையாக நடவடிக்கை எடுக்காத போலீசார் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்றும் கூறி வாதாடினார். வழக்கில் ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர் வழக்கின் விசாரணை அதிகாரியாக குமரி மாவட்ட சைபர் கிரைம் ஆய்வாளர் வசந்தி நியமிக்கப்பட்டு விசாரணை நடத்தி வருவதாக கூறினார்.
இதைக் கேட்ட நீதிபதி உடனடியாக ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் மற்றும் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார். பாலியல் வழக்கில் போலீசார் குற்றவாளிகளை கைது செய்வார்களா..? அல்லது உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடும் பட்சத்தில் பாலியல் வழக்கை விசாரித்த போலீசாரும், குற்றவாளிகளை காப்பாற்ற, வழக்கை முறையாக விசாரிக்காத குற்றச்சாட்டின் கீழ் போலீசாரும் குற்றவாளிகளாகச் சேர்க்கப்படுவார்களா என்பது அடுத்த கட்ட விசாரணையில் தெரிய வர வாய்ப்பு உள்ளதாகவும் முறையாக விசாரிக்காத போலீசாரையும் பாலியல் குற்றவாளிகளுக்கு உடந்தையாக செயல்பட்டதாக கூறி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடும் பட்சத்தில் முறையிடப் போவதாகவும் இளம் பெண் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது பாதிக்கப்பட்ட இளம்பெண்ணே தன்னை பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்து மிரட்டியவர்கள் மீது மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments
Thank you for your comments