அக்ராவரத்தை சேர்ந்த பாரத் கபடி குழுவினர் முதல் பரிசை வென்றனர்
வேலூர் மாவட்டம் அலமேலு மங்கா புரத்தில் வீரா கபடி கழகம் நடத்தும் கபடி போட்டி நடந்தது. இதில் காட்பாடி அக்ராவரத்தை சேர்ந்த பாரத் கபடி குழுவினர் முதல் பரிசை வென்றனர். வீரர்களுக்கு அக்ராவரம் நண்பர்களும் பொதுமக்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
வேலூர் மாவட்டம் காட்பாடி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 55 புதூரில் போட்டியிட்ட தனலட்சுமி பழனி 3064 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். தேர்தல் பொறுப்பாளரான 5வது வட்ட திமுக விநாயகம், தனலட்சுமி பழனிக்கு பூங்கொத்தை கொடுத்து சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். தனலட்சுமி பழனியும், தேர்தல் பொறுப்பாளரான 5வது வட்ட திமுக விநாயகத்துக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தனர்.
No comments
Thank you for your comments