கொட்டும் மழையில் ஆய்வு செய்த அமைச்சர்...!
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் கைலாசநாதர் திருக்கோயிலில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தமிழக தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார்.
காஞ்சிபுரம் கைலாசநாதர் திருக்கோயிலில் தமிழக தொழிற்துறை அமைச்சர்-காஞ்சிபுரம் மாவட்ட தேர்தெல் பொறுப்பாளர் தங்கம் தென்னரசு கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கோயிலின் வரலாற்றை பற்றியும் அதன் சிறப்பு அம்சங்களை ஆர்வத்துடன் கண்டு மகிழ்ந்தார்.
இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர்-சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், மாணவரணி செயலாளர்-காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார், மாவட்ட பிரதிநிதி எம்.எஸ்.சுகுமார், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அபுசாலி, மாவட்ட நெசவாளரணி அமைப்பாளர் சி.கே.வி.தமிழ்செல்வன், நகர துணை செயலாளர் ஜெகன்நாதன் உள்ளிட்ட தி.மு.கழகத்தினர் உடனிருந்தனர்.
Also Read 👍 நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யனுக்கு சர்வதேச போதை கடத்தல் கும்பலுடன் தொடர்பா..?
👍 Also Read 👉 பச்சையப்பாஸ் சில்க்ஸ், செங்கல்வராயன் சில்க்ஸ் துணிக் கடைகளில் வருமான வரித்துறையினர் சோதனை
No comments
Thank you for your comments