Breaking News

அடிதடி வழக்கில் 7 குற்றவாளிகள் கைது செய்து சிறையில் அடைப்பு

ஊத்துக்குளி:

ஊத்துக்குளி காவல் நிலைய அடிதடி வழக்கில் 7 குற்றவாளிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட S. பெரியபாளையம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வரும் பீகாரை சேர்ந்த முஹம்மத் மூர்சித் (23) என்பவரை 17.10.21 ஆம் தேதி இரவு 11 மணி அளவில் குடிபோதையில் பீகாரை சேர்ந்த 7 பேர் தகாத வார்த்தையால் திட்டியும் மரக்கட்டையால் தாக்கியும் காயப்படுத்தியதாகவும் முஹம்மத் மூர்சித் (23) என்பவர் 18.10.21 ஆம் தேதி ஊத்துக்குளி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை அடுத்து ஊத்துக்குளி காவல் நிலைய குற்ற எண் 904/2021 U/s 147, 148,294 (b), 323, 324, 506 (ii) IPC r/w 3 of TNPPDL Act இன் கீழ் வழக்கு பதிவு  செய்து விசாரணை செய்தனர்.

வழக்கின் விசாரணையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் பப்பு மகடு (41) சுனில் குமார் (22) மணிஷ்குமார் (20), விகாஸ் குமார் (20) அமர்ஜித் குமார் பாஷ்வா (35) சுனில் குமார் (19) மற்றும் விகாஷ் குமார் (18) ஆகியோரை ஊத்துக்குளி காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.


No comments

Thank you for your comments