தூய்மை பணியாளர்கள்சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
விருத்தாசலம்:
விருத்தாசலத்தில் தூய்மை பணியாளர்கள் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு பணி நிரந்தரம், நிலுவையில் உள்ள சம்பளங்களை வழங்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் பணி புரியும் தற்காலிக பணியாளர்களை 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் அரசு ஆணையின்படி நிரந்தரம் செய்ய வேண்டும் 3000 வரை மாதாந்திர சம்பளம் வழங்க வேண்டும்.
ஆனால் தற்போது உள்ள தமிழக அரசு பணிநிரந்தரம் செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது. மேலும் கடந்த ஓராண்டு காலமாக நிலுவையில் உள்ள சம்பளத் தொகையை வழங்க கோரி விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு 20-க்கும் மேற்பட்டோர் சிபிஎம்எல், மக்கள் விடுதலை மாவட்ட செயலாளர் ராமர் தலைமையில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் தூய்மை தற்காலிக பணியாளர்கள் கையில் பதாகைகளை ஏந்தி கண்டனம் ஆர்ப்பாட்டம் செய்து சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பின்பு சார் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
No comments
Thank you for your comments