கழுதூரில் 300 மரக்கன்றுகள் நடும் விழா
திட்டக்குடி
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் கழுதூர் ஊராட்சிக்குட்பட்ட சமத்துவபுரம்,அரியநாச்சி பகுதியில் 75 வதுசுதந்திரதினத்தின் அம்ருத் மஹொத்சவ் முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு ஊராட்சி மன்றதலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். துணைதலைவர் ஆகாசதுரை முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஏடி சண்முக சுந்தரம் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டுவைத்தார்.
பின்னர் நடப்பட்ட மரக்கன்றுகளுக்கு வலைகள் அமைத்தனர் இதில் 300 மரக்கன்றுகள் நடப்பட்டது.
அதனைத்தொடர்ந்து ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு காந்தி ஜெயந்தி விழா முன்னிட்டு ஊராட்சி மன்றதலைவர் கருணாநிதி தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தீர்மானம் இயற்றப்பட்டது பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஊராட்சி மன்றதலைவர் கிராமத்திற்கு வேண்டிய அணைத்து நலத்திட்ட,அடிப்படை வசதிகள் மற்றும் பல்வேறு பணிகளை சிறப்பாக செய்து வருகிறார் என புகழாரம் சூட்டினார்கள்.
இதில் கிராம நிர்வாக அலுவலர் சுகுந்தன், இன்ஜினியர் கார்த்திக்,செயலர் ரேகா,முன்னால் ஊராட்சி மன்றத்தலைவர் வெள்ளபாண்டியன்,வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.
No comments
Thank you for your comments