தனியார் மருத்துவமணை நிர்வாகத்தின் அலட்சியத்தால் 5 வயது சிறுவன் மூளை சாவு...!
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தனியார் மருத்துவமணை நிர்வாகத்தின் அலட்சியத்தால் போதிய சிகிச்சை அளிக்காததால் ஜந்து வயது சிறுவன் பரிதாபமாக மூளை சாவு அடைந்ததாக குற்றஞ்சாட்டி உறவினர்கள் மருத்துவமனையில் முற்றுகை போலீசாரிடம் வாக்குவாதம் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
குமரி மாவட்டம் திங்கள்நகர் சரல்விளை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் வெளிநாட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மணிகண்டனின் மனைவி பரமேஸ்வரி. இவர்களுக்கு ஸ்ரீஹரி ஜித் என்ற 5 வயதில் ஒரு மகன் உள்ளான்.
ரீஹரிஜித்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு, அங்குள்ள ஒரு ஆஸபத்திாியில் அனுமதிக்கப்பட்டான். இதனைதொடர்ந்து நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்தரியில் சிறுவன் சேர்க்கப்பட்டான்.
இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த சிறுவனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மேலும் சிறுவனின் உடல்நிலை மோசமானது. இதுபற்றி தகவல் அறிந்த சிறுவனின் உறவினர்கள் இன்று காலை ஆஸ்பத்திரியில் திரண்டனர். அவர்கள் திடீரென ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரபப்பு நிலவியது.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு
இதுபற்றி தகவல் அறிந்த வடசேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையில் போலீசார் மற்றும் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர், உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, சிறுவனின் உறவினர்கள் முற்றுகையை கைவிட்டனர். பின்னர் சிறுவனை மேல்சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள மற்றொரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
No comments
Thank you for your comments