Breaking News

அருள்மிகு பாண்டவ ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அடுத்த அய்யம்பேட்டை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பாண்டவ ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

காஞ்சிபுரம் அடுத்த அய்யம்பேட்டை நடுத்தெருவில் அமர்ந்து அருள்பாலித்து வரும் அருள்மிகு பாண்டவ ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் மகாலட்சுமி. காலபைரவர். மற்றும் பெரியாண்டவருக்கு தனித்தனி சன்னதிகள் அமைக்கப்பட்டு 51 சக்தி தேவதைகளுக்குசிறப்பாக வண்ணம் மயத்துடன் அமைக்கப்பட்டு நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று மகா கும்பாபிஷேகம் பருவதமலை விடோபானந்த மௌனயோகி சௌந்தரானந்த சுவாமிகள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. 

இந்த ஆலயத்தில் ஆண்டு முழுவதும் வயதான முதியோர்களுக்கு தொடர்ந்து கிராம மக்கள் பெரும் உதவியுடன் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Thank you for your comments