ஓய்வுபெற்ற விஏஓவை சர்வேயர் எனகூறி ஆள்மாறாட்டம் செய்த விஏஓ ..!
கடலூர் :
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கொரக்கவாடி கிராமத்தில் ஓய்வுபெற்ற விஏஓவை சர்வேயர் எனகூறி ஆள்மாறாட்டம் செய்த விஏஓ அன்புராஜ் மீது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் எங்களின் இடத்தை மீட்டு தர அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் விவசாயி சரவணன் கோரிக்கை வைத்துள்ளார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கொரக்கவாடி கிராமத்தில் சரவணன் த/ பெ ராமமூர்த்தி விவசாயி என்பவருக்கு 190/3பி சர்வே எண்ணில் 1 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.
இதன் பக்கத்தில் சுமார் 40 ஆண்டுகாலமாக துபாயில் பணிபுரியும் ஜலாலுதீன் மனைவி ஜெயினுபி என்பவருக்கு அதே சர்வே எண்ணில் 4 ஏ எனும் பிரிவில் 3 ஏக்கர் நிலம் உள்ளது.
இருவருக்கும் நீண்ட நாட்களாக வரப்பு தகராறு இருந்துள்ளது. சரவணன் தனது நிலத்தை அலக்க திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பணம் கட்டியுள்ளார்.
இதையறிந்த ஜலாலுதீன் மனைவி ஜெயினுபி கொரக்காவாடி கிராம நிர்வாக அலுவலர் அன்புராஜ் என்பவருக்கு பணம் லஞ்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
பின்னர் விஏஒ திட்டக்குடி அருகே ஆவட்டி கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரியான பரமசிவம் என்பரை வரவழைத்து, அவர்தான் இந்த பகுதி சர்வேயர் என கூறி ஆல் மாராட்டம் செய்து அரசுக்கு பணம் கட்டாமலே அந்த இடத்தை தவறாக சர்வே செய்துள்ளார்.
அதன்பின் சரவணன் நிலத்தை அலக்க அரசுக்கு பணம் கட்டியதன்படி, திட்டக்குடி வட்டாச்சியர் அலுவலகத்தில் இருந்து தொழுதூர் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் முறையாக தகவல் கொடுத்து மீண்டும் சர்வே செய்யப்பட்டு காவல்துறை அதிகாரி முன்னிலையில் அளவு கல் ஊனப்பட்டது.
அதை பாத்திமா பீபி என்பவர் இரவில் கூலி ஆல்வைத்து கல்லை தோண்டி எடுத்துள்ளார்.
இது தொடர்பாக மீண்டும் சர்வே செய்ய சரவணன் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணம் கட்டியுள்ளார்.
அதன்பேரில் திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அமுதா சர்வேயர் என்பவர் கடந்த ஜீலை 10 தேதி அளந்து காட்டினார் அதில் சரவணன் இடத்தில்தான் ஜலாலுதீன் கம்பி வேலி அமைத்துள்ளார் என்றும், கம்பி வேலியை அகற்ற வேண்டுமென்றும் கூறியுள்ளார்.
ஆனால் சர்வேயர் இருதரப்பினருக்கும் இடையே அளவுகளை சரியாக அளந்து காட்டாமல் நேரத்தை கடத்திவிட்டு இன்னொரு நாள்வந்து அளந்து காட்டுகிறேன் என்று தேதி குறிப்பிடாமல் அலட்சியமாக கூறிவிட்டு சென்றுவிட்டார்.
இதனால் மன உளச்சலுக்கு ஆளான சரவணன் அவரது குடும்பத்தினர்கள் எங்களின் இடத்தை மீட்டுதர இடையூராகவும் ஓய்வுபெற்ற விஏஓவை சர்வேயர் எனகூறி ஆள்மாறாட்டம் செய்த விஏஓ அன்புராஜ் மீது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் எங்களின் இடத்தை மீட்டு தர அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் கோரிக்கை வைத்திருந்தார்.
அதன்பின் நிளஅளவீடு செய்யவிடாமல் விஏஒ அன்புராஜ் நீண்டநாள் தடுத்துகொண்டு வந்துள்ளார் இதுகுறித்து விவசாயி சரவணன் விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவகத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் செப்டம்பர் 6ம் தேதி வட்டாட்சியர் அலுவலகம் மூலம் சரவணனுக்கு சம்மன் அனுப்பபட்டு காவல்துறை உதவியுடன் செப்டம்பர் 7 தேதி மறு அளவீடு செய்யப்பட்டது.
அதில் விவசாயி சரவணனுக்கு அளவீடு செய்யும்போது அரசு பதிவேட்டில் உள்ள அளவு சரியாக வந்தது இதை பார்த்த விஏஒ அன்புராஜ் சர்வேயர் மற்றும் பணியாளர்களை நிள அளவீடு செய்ய விடாமல் தடுத்து அவர்களை அழைத்துவந்துவிட்டார்.
வாங்கிய லஞ்சப்பணத்திற்கு விஸ்வாசம் காட்டுவதற்கே விஏஒ அன்புராஜ் நிள அளவீட்டை தடுத்து நிறுத்தியுள்ளார் என்று சரவணன் கூறினார்.
இதனால் விவசாயி சரவணன் அவரது குடும்பத்தினர் பெரும் மண வேதனையில் உள்ளார்கள்.
தவறான முறையில் பணிசெய்து வரும் அன்புராஜ் மீது இதுவரையில் சம்மந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வில்லை இனியாவது அவர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? என விவசாயி சரவணன் மற்றும் அவரது குடும்பத்தினர் கேள்வி எழுப்பினர்.
மேலும் தனது நிலத்தை அளந்து தன்னிடம் ஒப்படைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கையும் வைத்துள்ளார்.
No comments
Thank you for your comments