சாலையில் சிதறிக் கிடந்த 30 கோடி: முசிறியில் பரபரப்பு
திருச்சி, ஏப்.25-
முசிறிக்கு அருகே உள்ள அய்யம்பாளையம் என்ற கிராமத்திற்கு அருகே சற்று முன்னர் வேன் ஒன்று
அப்போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம் சாலையில் கவிழ்ந்துள்ளது.
வேன் கவிழ்ந்த அதே நேரத்தில் உள்ளே பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 14 பெட்டிகளும் சாலையில் சிதறி விழுந்துள்ளது.
இது குறித்து சம்பவ இடத்திற்கு உடனடியாக பொலிசார் விரைந்து சென்று விசாரணை செய்தபோது, முசிறியில் இருந்து ஸ்டேட் வங்கி அரியலூருக்கு 30 கோடி ரூபாய் பணம் கொண்டு சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
சாலையில் 30 கோடி ரூபாய் பணம் பெட்டிகளுடன் சிதறிக்கிடந்த சம்பவம் அய்யம்பாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
No comments
Thank you for your comments