Breaking News

திருவண்ணாமலை கம்பன் மகளிர் கல்லூரியில் கலைஇலக்கிய விழா

திருவண்ணாமலை, மார்ச் 7-
திருவண்ணாமலை திருக்கோயிலூர் சாலையிலுள்ள கம்பன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலை இலக்கிய விழா நடைபெற்றது.

இந்த விழாவில் கல்லூரியின் முதல்வர் இரா.சண்முகவள்ளி தலைமை வகித்து பேசினார். கல்லூரி மாணவிகள் செயலாளர் சௌந்தர்யா வந்திருந்த அனைவரையும் வரவேற்று பேசினார். சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர் தியா கலந்து கொண்டு பேசினார். இதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவிகளின் பல்வேறு தனி திறமைகளை வெளிப்படுத்தும் வகையில்
போட்டிகள் நடத்தப்பட்டது. தனிப்பாடல் குழு பாடல் ஓவியம் கண்ணாடியில் வர்ணம் தீட்டுதல் மண்பானையில் வர்ணம் தீட்டுதல், மவுன மொழி பூ வேலைப்பாடு இசைக்கருவிகள் இசைத்தல், தமிழ் ஆங்கிலம் கவிதை கட்டுதரை பேச்சுப்போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் மாணவிகள் திரளாக கலந்து கொண்டார்கள். கல்லூரியின் சிறந்த மாணவியாக கணினி பயன்பாட்டுத்துறை மாணவி கீர்த்தனா, தேர்வு
செய்யப்பட்டார். போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவில் கல்லூரி துணைத் தலைவர்கள், பேராசிரியர்கள், கல்லூரி மாணவிகள் மற்றும் இவரது திரளாக கலந்துகொண்டார்கள்.

No comments

Thank you for your comments