Breaking News

திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் அலுவலர்கள் நியமனம்

திருவண்ணாமலை, மார்ச் 9-
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற மே 16ந் தேதி நடைபெறவுள்ளது. அடுத்த மாதம் 22ந் தேதி முதல் 29ந் தேதிவரை வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது. இதையட்டி திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள 8சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம்
செய்யப்பட்டுள்ளனர். இதுபற்றிய விவரம்வருமாறு,

திருவண்ணாமலை: கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி, கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் ஏ.சுப்பிரமணி, தி.மலை தாசில்தார் சி.பன்னீர்செல்வம் 

செங்கம் (தனி) : கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) ஏ.சுப்பிரமணி, செங்கம் தாசில்தார் எம்.காமராஜ், தண்டராம்பட்டு தாசில்தார் ஏழுமலை 

கீழ்பென்னாத்தூர் : கலால் உதவி ஆணையர் பானு, தி.மலை வட்ட வழங்கல் அலுவலர் ஆர்.முருகன், கோட்ட கலால் அலுவலர் பி.ரேணுகா
 
கலசபாக்கம் : மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுப்பிரமணியன், கலசபாக்கம் தாசில்தார் எஸ்.ராஜலட்சுமி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார்
சுப்பிரமணியன் 

போளூர் : மாவட்ட வழங்கல் அலுவலர் சாவித்திரி, பறக்கும்படை தாசில்தார்
தினகரன், போளூர் தாசில்தார் டி.புவனேஸ்வரி

ஆரணி : சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் ஜெ.ஜோதி, ஆரணி தாசில்தார் ஜி.கிருஷ்ணமூர்த்தி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சுரேஷ்

செய்யாறு : சப்-கலெக்டர் டி.பிரபு சங்கர், ஆர்டிஒ நேர்முக உதவியாளர்
எல்.பாஸ்கர், செய்யாறு தாசில்தார் ரெஹானாபேகம்

வந்தவாசி (தனி) : மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தண்டாயுதபாணி, வந்தவாசி தாசில்தார் அற்புதம், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார்பாலமுருகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

No comments

Thank you for your comments