Breaking News

“2029-ல் பிரதமர் யாரு?” - தவெக எம்.எல்.ஏ கணிப்புக்கு காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் பதில்!


சென்னை | செப்டம்பர் 04, 2026

2029 நாடாளுமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய் பிரதமராவார் என்று தவெக எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் கருத்துத் தெரிவித்திருந்த நிலையில், அவருக்குக் காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் தாரகை கத்பர்ட் பேரவைக்கு வெளியே பதிலடி கொடுத்துள்ளார்.

செப்டம்பர்மாத ராசி பலன்கள் 2026
ராஜயோகங்கள் தரும் அதிர்ஷ்டம்!
இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவுகள் திறக்கிறது!

👑 எந்த ராசிக்கு பணவரவு அதிகரிக்கும்?
இந்த 5 ராசிக்கு ராஜயோகம்  💰 உங்க ராசி இதில் இருக்கா? 

 தவெக எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் கூறியது:

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி தவெக எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில்:

"2029-ல் நாட்டின் பிரதமர் யார் என்பதை டெல்லி முடிவு செய்யப்போவது இல்லை; தமிழகம்தான் தீர்மானிக்கும். 2026-ல் தவெக தலைவர் விஜய்யை தமிழக முதல்வர் நாற்காலியில் அமரவைத்த ராகுல் காந்தியே, 2029-ல் அவரது கையைப் பிடித்து பிரதமர் நாற்காலியிலும் அமரவைப்பார். 2029 இந்திய அரசியலில் மிகப்பெரிய அதிர்ச்சிகரமான மாற்றங்கள் நிகழும்."


காங்கிரஸ் எம்.எல்.ஏ தாரகை கத்பர்ட் பதிலடி:

தவெக எம்.எல்.ஏ-வின் இந்தக் கருத்துக்குப் பதில் அளிக்கும் வகையில் காங்கிரஸ் சட்டப்பேரவைக்குழுத் தலைவர் தாரகை கத்பர்ட் தெரிவித்ததாவது:

"இந்திய அளவில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே தலைவராக ராகுல் காந்தி திகழ்கிறார். தவெக எம்.எல்.ஏ-க்கள் இன்னமும் அரசியல் முதிர்ச்சியின்றி ரசிகர் மனப்பான்மையிலேயே பேசி வருகின்றனர்.

அடுத்த பிரதமர் ராகுல் காந்திதான் என்பதில் தமிழக முதல்வர் விஜய்யே மிகவும் தெளிவாக இருக்கிறார். எனவே, தேவையில்லாத ஊகங்களுக்கும் வதந்திகளுக்கும் இடம் கொடுக்க வேண்டியதில்லை. 2029-ல் ராகுல் காந்திதான் இந்தியப் பிரதமராகப் பொறுப்பேற்பார்."

அரசியல் களத்தில் 2029 பிரதமர் வேட்பாளர் குறித்துத் தவெக மற்றும் காங்கிரஸ் இடையே உருவாகியுள்ள இந்த விவாதம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



No comments

Thank you for your comments