Breaking News

“தம்மனூர் ஏரி மண் எடுப்பில் முறைகேடு இல்லை!” - ஆட்சியரிடம் கிராம விவசாயிகள் பொய்யான புகாருக்கு எதிராக மனு!

காஞ்சிபுரம் | செப்டம்பர் 02, 2026

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட தம்மனூர் ஏரியில் விதிமுறைகளை மீறி மணல் அள்ளப்படுவதாக அளிக்கப்பட்ட புகார் முற்றிலும் பொய்யானது என்றும், தனிநபர் ஆதாய நோக்கத்துடன் அளிக்கப்பட்ட அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தம்மனூர் கிராம விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

செப்டம்பர்மாத ராசி பலன்கள் 2026
ராஜயோகங்கள் தரும் அதிர்ஷ்டம்!
இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவுகள் திறக்கிறது!

👑 எந்த ராசிக்கு பணவரவு அதிகரிக்கும்?
இந்த 5 ராசிக்கு ராஜயோகம்  💰 உங்க ராசி இதில் இருக்கா? 

 சம்பவம் என்ன?

கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், ‘காவேரி மற்றும் நீர்வள ஆதார பாதுகாப்பு சங்கம்’ சார்பில் சுடலைக்கண்ணு என்பவர் ஒரு புகார் மனு அளித்தார். அதில், தம்மனூர் ஏரியில் அரசு நிர்ணயித்த அளவை மீறி முறையற்ற முறையில் மண் எடுக்கப்படுவதாகவும், இதனால் ஏரியின் நீர் கொள்ளளவு பாதிக்கப்பட்டு விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

விவசாயிகள் அளித்த விளக்கமும் கோரிக்கையும்:

இதற்கு மறுப்பு தெரிவித்து, தம்மனூர் ஏரி நீர்ப்பாசன சங்கத் தலைவர் சக்திவேல் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தி.சினேகா அவர்களை நேரில் சந்தித்துப் புகார் மனு ஒன்றைக் கொடுத்தனர்.

விவசாயிகள் அளித்த மனுவில் குறிப்பிட்ட முக்கிய அம்சங்கள்:

  • அரசு அனுமதி பெற்ற பணி: கடந்த இரண்டு போகமாக ஏரியில் நீர் தங்காமல் விவசாயம் பாதிக்கப்பட்ட நிலையில், P&C Projects Pvt. Ltd நிறுவனம் மூலம் நெடுஞ்சாலைப் பணிக்காகச் சர்வே எண் 471-ல் அரசு அனுமதி பெற்று முறையாகச் சாதாரண மண் வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது.
  • விவசாயத்திற்குப் பயனுள்ளது: ஏரியைத் தூர்வாரி மண் எடுப்பதால் மழைக்காலத்தில் நீர் தேங்கும் கொள்ளளவு அதிகரித்து, விவசாயத்திற்குப் பெரும் உதவியாக இருக்கும்.
  • விதிமீறல் இல்லை: எந்தவித விதிமீறலும் இன்றி நடைபெறும் இப்பணியைத் தம்மனூர் நீர்ப்பாசன சங்கத்தின் 5 நபர்கள் கொண்ட குழுவினர் தினமும் நேரில் சென்று கண்காணித்து வருகிறோம்.
  • தனிநபர் ஆதாயம்: ஊருக்கும் ஏரிக்கும் சம்பந்தமில்லாத சுடலைக்கண்ணு என்பவர், தனிநபர் ஆதாய நோக்கோடும் உள்நோக்கத்தோடும் இப்பணியைத் தடுத்து நிறுத்தப் பொய்யான தகவல்களைப் பரப்பி வருகிறார்.

எனவே, பொய்யான புகார்களைக் கூறி அரசு அதிகாரிகளையும் தனியார் நிறுவனத்தையும் குற்றம்சாட்டி வரும் சுடலைக்கண்ணு மீது உரிய விசாரணை நடத்தி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் வலியுறுத்தினர்.

No comments

Thank you for your comments