Breaking News

“சபரிமலை அய்யப்ப சேவா சமாஜ முகாம்” - காஞ்சி இளைய பீடாதிபதியிடம் அழைப்பிதழ் வழங்கி ஆசி பெற்ற நிர்வாகிகள்!


காஞ்சிபுரம் | செப்டம்பர் 02, 2026

சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் (வட தமிழ்நாடு) சார்பாக நடத்தப்படவுள்ள 2-ஆம் ஆண்டு கன்னிநிலை பயிற்சி முகாம் தொடர்பான அழைப்பிதழை, காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் வழங்கி நிர்வாகிகள் அருளாசி பெற்றனர்.

குன்றத்தூரில் பயிற்சி முகாம்:

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் சார்பில் கன்னி அய்யப்ப சுவாமிகளுக்கான 2-ஆம் ஆண்டு பயிற்சி முகாம் வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.

இப்பயிற்சி முகாம் சிறப்புற நடைபெற வேண்டியும், இதன் அழைப்பிதழை ஸ்ரீமடத்தின் பீடாதிபதியிடம் சமர்ப்பித்து ஆசி பெறவும் சபரிமலை அய்யப்ப சேவா சமாஜத்தின் முக்கிய நிர்வாகிகள் காஞ்சிபுரம் ஸ்ரீமடத்திற்கு நேரில் சென்றனர்.

சுவாமிகளிடம் ஆசி பெற்ற நிர்வாகிகள்:

காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீஸ்ரீஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளைச் சந்தித்த நிர்வாகிகள், முகாமின் அழைப்பிதழைச் சமர்ப்பித்து ஆசி பெற்றனர்.

இந்நிகழ்வில்:

  • மாநில இணைச் செயலாளரும் பயிற்சி முகாம் ஒருங்கிணைப்பாளருமான: காஞ்சி V. ஜீவானந்தம்
  • மாவட்டப் பொருளாளர்: R. யுவராஜ்
  • மாவட்டச் செயற்குழு உறுப்பினர்: E. கோட்டீஸ்வரன்
  • மாநகரத் தலைவர்: K. ரவி
  • மாநகரத் துணைத் தலைவர்: K.S. ஜெயசந்திரன் குரு

உள்ளிட்ட அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் பலர் உடனிருந்து ஸ்ரீஸ்ரீஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் பொன்னாடைகளும் ஆசிகளும் பெற்றனர்.

No comments

Thank you for your comments