Breaking News

“வாலாஜாபாத்தில் 15 நாட்களாகக் குடிநீர் தட்டுப்பாடு!” - 4-வது வால்வைச் சீரமைக்க ஆட்சியர் சினேகாவிடம் கவுன்சிலர் மனு!


 காஞ்சிபுரம் | ஆகஸ்ட் 17, 2026

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பேரூராட்சி ஆறுமுகப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் வால்வுகள் பழுதானதால் ஏற்பட்டுள்ள குடிநீர்ப் பற்றாக்குறையை உடனடியாகச் சரி செய்ய வலியுறுத்தி, 3-வது வார்டு பேரூராட்சி கவுன்சிலர் லயன் வெங்கடேசன் அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

ஆவணி மாத ராசி பலன்கள் 2026
[ ஆக.18  முதல் செப்.17 வரை ]
"சூரியன் ஆட்சி, குரு உச்சம்! 
கன்னியில் புதன் உச்சம்,  துலாமில்
சுக்ரன் ஆட்சி

👑 எந்த ராசிக்கு பணவரவு அதிகரிக்கும்?
இந்த 5 ராசிக்கு யோகம்  💰 உங்க ராசி இதில் இருக்கா? 

 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் திருமதி. தி. சினேகா, இ.ஆ.ப. அவர்களிடம் இக்கோரிக்கை மனு நேரில் வழங்கப்பட்டது..

மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய விவரங்கள்:

15 நாட்களாகக் குடிநீர் விநியோகம் பாதிப்பு:

வாலாஜாபாத் பேரூராட்சி 2, 3, 4, 6 மற்றும் 7 ஆகிய வார்டுகளை உள்ளடக்கிய ஆறுமுகப்பேட்டை பகுதியில் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைந்திருக்கிறது. இதிலிருந்து குடிநீர் விநியோகிக்கும் 4 பிரதான வால்வுகளும் பழுதடைந்ததால், கடந்த 15 நாட்களாகப் பொதுமக்களுக்குக் குடிநீர் கிடைக்காமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

பேரூராட்சி அலட்சியம் & கவுன்சிலர் சொந்தச் செலவு நடவடிக்கை:

இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், கவுன்சிலர் லயன் வெங்கடேசன் தனது சொந்தச் செலவில் டேங்கர் லாரிகள் மூலம் பொதுமக்களுக்குக் குடிநீர் விநியோகம் செய்தார். மேலும், சொந்த நிதி மூலம் 3 வால்வுகளையும் சீரமைத்துள்ளார்.

4-வது வால்வு உதிரிபாகங்கள் தட்டுப்பாடு:

4-வது வால்வுக்கான உதிரிபாகங்கள் சந்தையில் கிடைக்காததால் அதனை இன்னும் சீரமைக்க முடியவில்லை. தற்போது 3 வால்வுகள் மூலம் 60% குடிநீர் தேவை மட்டுமே பூர்த்தி செய்யப்படுவதால் மக்கள் தொடர்ந்து அவதியுற்று வருகின்றனர்.

சிறிய பம்புகள் & கைபம்புகள் பழுது:

பேரூராட்சியில் உள்ள 35-க்கும் மேற்பட்ட சிறிய மின்விசை மோட்டார் குடிநீர்த் தொட்டிகளில் பாதிக்கும் மேற்பட்டவையும், 100-க்கும் மேற்பட்ட இந்தியா மார்க் கைப்பம்புகளில் பாதிக்கும் மேற்பட்டவையும் பழுதடைந்து முடங்கிக் கிடக்கின்றன.

மாவட்ட நிர்வாகத்திற்கு வைக்கப்பட்ட கோரிக்கை:

ஆறுமுகப்பேட்டை பகுதியில் குளம், கிணறு உள்ளிட்ட மாற்று நீர் ஆதாரங்கள் எதுவும் இல்லாததால் பொதுமக்கள் முழுமையாக இந்த நீர்த்தேக்கத் தொட்டியையே நம்பியுள்ளனர்.

எனவே, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நேரில் ஆய்வு மேற்கொண்டு, பழுதடைந்த 4-வது வால்வு, சிறிய மின்விசை மோட்டார்கள் மற்றும் கைபம்புகளை உடனடியாகச் சீரமைத்து வாலாஜாபாத் பகுதி மக்களின் குடிநீர்ப் பற்றாக்குறையைத் தீர்க்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments

Thank you for your comments