Breaking News

பேரறிஞர் அண்ணா நினைவு தினம்: நினைவு இல்லத்தில் மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை!


 காஞ்சிபுரம், பிப். 3: 

முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 57-வது நினைவு தினத்தையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் மாவட்ட ஆட்சியர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


நினைவு இல்லத்தில் மரியாதை:

காஞ்சிபுரம் சின்னக் காஞ்சிபுரம் பகுதியில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்திற்குச் சென்ற மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், அங்குள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் பா. முருகேசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். தொடர்ந்து நினைவு இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வரும் அண்ணாவின் அரிய புகைப்படங்கள் மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்களை ஆட்சியர் பார்வையிட்டார்.

அண்ணாவின் நினைவு நாளையொட்டி மாவட்டம் முழுவதும் உள்ள அவரது உருவச்சிலைகளுக்குப் பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூக அமைப்புகளும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

No comments

Thank you for your comments