Breaking News

விருத்தாசலத்தில் அராஜகம்! மதுபோதை இளைஞர்கள் அட்டகாசம்: வடமாநில வியாபாரி மீது சரமாரி தாக்குதல் - 3 பேர் கைது!


 விருத்தாசலம் | டிசம்பர் 27, 2025

விருத்தாசலத்தில் மதுபோதையில் இருந்த 3 இளைஞர்கள், சாலையோர வியாபாரி ஒருவரைத் தாக்கி பொருட்களைச் சூறையாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சம்பவம் குறித்த விவரம்: மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த லாகன் என்பவர், கடலூர் - விருத்தாசலம் பிரதான சாலையோரத்தில் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களை விற்பனை செய்து வருகிறார். இன்று அதிகாலை, மணலூர் பகுதியைச் சேர்ந்த 3 இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து, லாகனிடம் மிரட்டிப் பொருட்களை வாங்கியுள்ளனர்.

வாங்கிய பொருட்களுக்கு லாகன் பணம் கேட்டதால் ஆத்திரமடைந்த அந்த மதுபோதை இளைஞர்கள், வியாபாரியைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். மேலும், அவர் விற்பனைக்காக வைத்திருந்த விளையாட்டுப் பொருட்கள் அனைத்தையும் அடித்து உடைத்துச் சூறையாடினர்.

போலீசார் அதிரடி: தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விருத்தாசலம் காவல்துறையினர், அங்கிருந்து தப்ப முயன்ற 3 இளைஞர்களையும் மடக்கிப் பிடித்தனர். அவர்களின் இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்த போலீசார், மூன்று பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


பொதுமக்கள் கோரிக்கை: விருத்தாசலம் பகுதியில் அண்மைக்காலமாக அதிகாலையிலேயே மது அருந்திவிட்டு, சாலையோர வியாபாரிகள் மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்களிடம் வம்புச் சண்டைக்குச் செல்லும் கும்பல்கள் அதிகரித்து வருவதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இத்தகைய நபர்கள் மீது காவல்துறை இரும்புக்கரம் கொண்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி மற்றும் படங்கள்: R.காமராஜ், விருத்தாசலம்.

 

2026-ம் ஆண்டு: குபேர யோகம் பெறப்போகும் ராசிகள் எவை?

| 2026 Career & Finance Horoscope|  @K24AstroTv 


No comments

Thank you for your comments