இபிஎஃப் பணம் வழங்காததால் கொந்தளிப்பு: விருத்தாசலம் நகராட்சி ஊழியர்கள் தர்ணா போராட்டம்!
விருத்தாசலம், டிசம்பர் 16, 2025:
😠 மூன்று ஆண்டுகால நிலுவை
விருத்தாசலம் நகராட்சியில் 40-க்கும் மேற்பட்ட நிரந்தரப் பணியாளர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தற்காலிகத் தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட தற்காலிகப் பணியாளர்களுக்கு அவர்களின் மாதச் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட இ.பி.எஃப். தொகையை கடந்த மூன்று ஆண்டுகளாக முறையாகச் செலுத்தவில்லை எனப் பணியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து நகராட்சி அலுவலகத்தில் பலமுறை கோரிக்கை விடுத்தும் நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால், இன்று தற்காலிகத் தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் நகராட்சி அலுவலகம் முன்பு திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
💸 மூன்று மாதப் பணம் மட்டுமே
மூன்று ஆண்டு காலமாகச் செலுத்தப்பட வேண்டிய இபிஎஃப் தொகையில், வெறும் மூன்று மாதங்களுக்குரிய பணம் மட்டுமே அவரவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாகப் பணியாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
மாதச் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட முழுமையான இபிஎஃப் தொகையை உடனடியாக வங்கிக் கணக்குகளில் வரவு வைக்க வேண்டும் என வலியுறுத்தி, நகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட பணியாளர்கள், நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்துக் கண்டனக் கோஷங்களை எழுப்பினர்.
இந்தத் திடீர் போராட்டத்தால் நகராட்சி அலுவலக வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.
தொடர்புக்கு: R. காமராஜ் - 9080215691
🌿 மேஷம் முதல் மீனம் வரை |
2026-ம் ஆண்டு ராசி பலன்கள்
நற்பலன்களை பெற என்ன செய்யவேண்டும்.. பாக்கியம் பெருகும்! | தெய்வ அருள் உங்களை தழுவும் | தவறாமல் படிக்கவும் ⚡
🛒 புதிய தகவல் இதோ 👇

No comments
Thank you for your comments