Breaking News

மங்கலம்பேட்டையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் – பொதுமக்கள் அதிக அளவில் பயனடைந்தனர்


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள மங்கலம்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பொதுச் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை, விருத்தாசலம் வட்டாரம் சார்பில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் நடைபெற்றது.

 

இந்த முகாம் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.ஆர். ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

இதில் மங்கலம்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் சம்சாத் பாரி இப்ராஹிம், துணைத் தலைவர் வேல்முருகன் மற்றும் பலர் முன்னிலை வகித்தனர்.

🔹 முகாமில் வழங்கப்பட்ட சிகிச்சைகள்

முகாமில் பின்வரும் சிறப்பு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டன:

  • இருதய சிகிச்சை
  • நரம்பியல்
  • நுரையீரல்
  • குழந்தைகள் நலம்
  • பொது மருத்துவம்
  • எலும்பு முறிவு சிகிச்சை
  • நீரழிவு நோய் சிகிச்சை
  • தோல் மருத்துவம்
  • கண் மற்றும் பல் மருத்துவம்
  • மகப்பேறு & மகளிர் நலம்
  • ஸ்கேன், எக்ஸ்ரே, இசிஜி
  • சித்த மருத்துவம் மற்றும் இயன்முறை மருத்துவம்
  • காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவம்
  • அறுவை சிகிச்சை ஆலோசனைகள்
  • கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை
  • காசநோய் மற்றும் தோல் நோய் ஆய்வுகள்
  • ஆய்வக பரிசோதனைகள்

 

மேலும்,

  • முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டன
  • மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன

🔹 மக்கள் பெரும்பான்மை பங்கேற்பு

மங்கலம்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பல்வேறு மருத்துவ சேவைகளைப் பெற்றனர்.

🔹 கலந்து கொண்ட முக்கியவர்கள்

  • திமுக நகர செயலாளர் செல்வம்,
  • வழக்கறிஞர் பாரி இப்ராஹிம்,
  • ராவணன், சாந்தகுமார், சாகுல் அமீது,
  • வைரமுத்து, முகமது பைசல், சிரஞ்தீன், யூசுப்,
  • அப்துல் அஜித், ரமணன், சேகர்
  • உள்ளிட்ட பலர் மற்றும் மங்கலம்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர்கள் முகாமில் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments