Breaking News

தேர்தல் 2026: காஞ்சிபுரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு! நேரில் ஆய்வு செய்த ஆட்சியர் கலைச்செல்வி மோகன்.



காஞ்சிபுரம் | டிசம்பர் 27, 2025

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்டப் பணிகளை காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் வேகமெடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.


பாதுகாப்புக் கிடங்கில் ஆய்வு: 

காஞ்சிபுரத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள கிடங்கில், இயந்திரங்களின் முதல்நிலைச் சரிபார்ப்பு (First Level Checking) பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்: 

முன்னதாக, காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த முகாமையும் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு: 

ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் கலைச்செல்வி மோகன்:

  • காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்றும் (டிச. 27), நாளையும் (டிச. 28) சிறப்புத் திருத்த முகாம்கள் நடைபெறுகின்றன.
  • இதன் தொடர்ச்சியாக, அடுத்த வாரமும் அதாவது ஜனவரி 3 (சனிக்கிழமை) மற்றும் ஜனவரி 4 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறும்.


பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் முகவரி மாற்றங்கள் செய்ய விரும்பும் பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

 

2026-ம் ஆண்டு: குபேர யோகம் பெறப்போகும் ராசிகள் எவை?

| 2026 Career & Finance Horoscope|  @K24AstroTv 

No comments

Thank you for your comments