Breaking News

காஞ்சியில் மெகா வேலைவாய்ப்பு முகாம்: ஒரே நாளில் 533 பேருக்கு பணி ஆணை! அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.

 காஞ்சிபுரம் | டிசம்பர் 27, 2025

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், 533 இளைஞர்களுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் இந்த முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகக் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு, தேர்வு செய்யப்பட்டவர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இந்த முகாமில் 152-க்கும் மேற்பட்ட முன்னனி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்குத் தேவையான பணியாளர்களைத் தேர்வு செய்தன. மாவட்டம் முழுவதிலுமிருந்து சுமார் 2072 வேலைநாடுநர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

தேர்வு முடிவுகள்:

  • பணி நியமன ஆணை பெற்றோர்: 533 பேர்.
  • முதற்கட்ட நேர்காணலில் தேர்வு: 265 பேர்.

முக்கியப் பங்கேற்பாளர்கள்: 

இந்நிகழ்வில் காஞ்சிபுரம் எம்பி க.செல்வம், எம்எல்ஏக்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி. எழிலரசன், வேலைவாய்ப்புத் துறை மண்டல இணை இயக்குநர் தேவேந்திரன் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் முன்னிலை வகித்தனர். முன்னதாக துணை இயக்குநர் கி.செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.


சிறப்பு ஏற்பாடுகள்: 

முகாமிற்கு வந்திருந்த இளைஞர்கள் எளிதில் நேர்காணல் அறைகளைக் கண்டறியும் வகையில், எந்தெந்த நிறுவனங்கள் எந்த அறையில் உள்ளன என்பதை விளக்கும் பெரிய அளவிலான விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. இது வேலைநாடுநர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. விழாவின் நிறைவில் கல்லூரி முதல்வர் வ.அண்ணாத்துரை நன்றி கூறினார்.

 

2026-ம் ஆண்டு: குபேர யோகம் பெறப்போகும் ராசிகள் எவை?

| 2026 Career & Finance Horoscope|  @K24AstroTv 

No comments

Thank you for your comments