காஞ்சிபுரம் – தெற்கு மாவட்ட அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது
காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தின் அவசர செயற்குழு கூட்டம், அவைத்தலைவர் ச. இனியரசு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர்கள் ஓ.எஸ். தினகரன், க. செல்வம் எம்.பி., மாவட்ட பொருளாளர் திருமதி கு. மலர்விழி, சன்பிராண்ட் கே. ஆறுமுகம் ஆகியோர் முன்னிலையாகக் கலந்து கொண்டனர்.
முக்கிய தீர்மானம்
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானமாக,
டிசம்பர் 14 – திருவண்ணாமலையில் நடைபெறும் கழக இளைஞர் அணி மண்டல மாநாட்டில், கழக தலைவர் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பங்கேற்கும் நிலையில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்திலிருந்து 5000 இளைஞர்களை கலந்து கொள்ளச் செய்வது என ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது.
கலந்துகொண்டவர்கள்
- CVMP. எழிலரசன், MLA
- தலைமை செயற்குழு உறுப்பினர்கள்
- பொதுக்குழு உறுப்பினர்கள்
- மாநகர, நகர, ஒன்றியம், பகுதி, பேரூராட்சி செயலாளர்கள்
- கழக அணிகளின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள்
- சிறப்பு அழைப்பாளர்கள்
காஞ்சிபுரம் தெற்கு முழுவதிலிருந்தும் பல்வேறு கழக பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்று, மாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்தனர்.
🌿 மேஷம் முதல் மீனம் வரை |
2026-ம் ஆண்டு ராசி பலன்கள்
நற்பலன்களை பெற என்ன செய்யவேண்டும்.. பாக்கியம் பெருகும்! | தெய்வ அருள் உங்களை தழுவும் | தவறாமல் படிக்கவும் ⚡
🛒 புதிய தகவல் இதோ 👇

No comments
Thank you for your comments