காஞ்சிபுரத்தில் மாவட்ட வளர்ச்சிக்கான கண்காணிப்புக் குழு கூட்டம்
காஞ்சிபுரம், டிச.23:
2026-ம் ஆண்டு: குபேர யோகம் பெறப்போகும் ராசிகள் எவை | 2026 Career & Finance Horoscope|
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழுவின் ஆய்வுக் கூட்டம் அக்குழுவின் தலைவரும் ஸ்ரீபெரும்புதூர் எம்பியுமான டி.ஆர்.பாலு தலைமையில் நடைபெற்றது.
கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி,காஞ்சிபுரம் தொகுதி எம்பி க.செல்வம்,எம்எல்ஏக்கள் க.சுந்தர், எழிலரசன்,எஸ்.ஆர்.ராஜா மற்றும் மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசின் பல்வேறு துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
ஒன்றிய அரசின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் அனைத்தையும் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெறுகிறதா என்பதையும் எம்பி டி.ஆர்.பாலு அதிகாரிகளிடம் கேட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அரசு நலத் திட்டங்கள் குறித்து ஆலோசனைகள் வழங்கியதோடு பணிகளை உரிய காலத்தில் முடிக்குமாறும் கேட்டுக் கொண்டார். ஆய்வுக் கூட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குநர் க.ஆர்த்தி, சார் ஆட்சியர் ஆஷிக்அலி, மாவட்ட ஊராட்சிக் குழுவின் தலைவர் மலர்க்கொடி குமார் மற்றும் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments