Breaking News

அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு தொழுதூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் வீரவணக்கம்


டிசம்பர் 6 — புரட்சியாளர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளையும் தலித் இஸ்லாமியர் எழுச்சி நாள் நிகழ்வையும் முன்னிட்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மேதகு எழுச்சித் தமிழர் அவர்களின் ஆணைக்கிணங்க, கடலூர் மாவட்டத்திலுள்ள தொழுதூர், எழுத்தூர், தச்சூர், திட்டக்குடி, பட்டூர் பகுதிகளில் மரியாதை நிகழ்வுகள் நடைபெற்றது.

உள்ளூர் பகுதிகளில் அமைந்திருந்த அம்பேத்கர் திருவுருவ படங்களுக்கு மலர் தூவி, மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வில் ஏராளமான விசிக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

குனத்தொகையன் தலைமையில் நிகழ்வு

நாடாளுமன்ற தொகுதி துணை செயலாளர் குணசேகர் (குனத்தொகையன்) தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்,

  • ஒன்றிய பொருளாளர் தொழுதூர் ரா. ரமேஷ்,
  • ஒன்றிய செயலாளர் காசிபுயல்,
  • திட்டக்குடி நகர துணை செயலாளர், வழக்கறிஞர் கார்த்திகேயன்,
  • இளமங்கலம் பிரேம்,
  • வழக்கறிஞர் ஒரங்கூர் பாலா,
  • தொழுதூர் பாண்டியன்,
  • திட்டக்குடி படையப்பா,

உள்பட பலர் கலந்து கொண்டு அம்பேத்கர் அவர்களின் சமூக நீதி சிந்தனைகளை நினைவுகூர்ந்தனர்.

  

📰 செய்தியாளர்: R. காமராஜ் (9080215691)

🔮 2026 புத்தாண்டு ராசி பலன் & பரிகாரம்: இந்த ஆண்டு உங்கள் அதிர்ஷ்டத்தை திறக்கும் ரகசியங்கள்!
















No comments

Thank you for your comments