ஜன.6 ஆம் தேதிக்குள் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி,சேலை - அமைச்சர் ஆர்.காந்தி
காஞ்சிபுரம், டிச.23:
தமிழக அரசின் சார்பில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச வேட்டி,சேலை மற்றும் பொங்கலுக்கு தேவையான பொருட்கள் ஆகியன ஆண்டு தோறும் அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி,சேலை ஆகிய அனைத்தும் இம்மாதம் 15 ஆம் தேதியே வருவாய்த்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது.
இதுவரை இல்லாத வகையில் 20 ஆண்டுகளில் முதல் முறையாக டிசம்பர் மாதமே அனைத்து வேட்டி,சேலைகளும் வருவாய்த்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எனவே வரும் ஜனவரி 6 ஆம் தேதிக்கு முன்னதாகவே அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச வேட்டி சேலை வழங்கப்படும் எனவும் அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.
No comments
Thank you for your comments