அதே நேரத்தில், ஊ.மங்கலம் காவல்துறையினர் அருந்ததியர் மக்கள்மீது போட்டதாக கூறப்படும் பொய் வழக்குகளை ரத்து செய்யவும் கோரப்பட்டது.
இதனையடுத்து, விருத்தாசலம் பாலக்கரை சந்திப்பில் அனைத்து மக்கள் விடுதலைக் கட்சி மற்றும் நீல நெருப்பு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ்வார்ப்பாட்டம் நீல நெருப்பு கட்சி நிறுவனர் பாளையம் பூபதி தலைமையில் நடந்தது.
இந்த நிகழ்வில் விடுதலை தமிழ் புலிகள் கட்சி குடந்தை அரசன், தமிழ் புலிகள் கட்சி நிறுவனர் திருவள்ளுவன், அனைத்து மக்கள் விடுதலைக் கட்சி மாநில செயல் தலைவர் தங்க. முருகன் ஆகியோருடன், இந்திய குடியரசு கட்சி மாநில பொதுச் செயலாளர் மங்கா பிள்ளை, விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் ராஜ்குமார், புரட்சி பாரதம் கட்சி மத்திய மாவட்ட செயலாளர் ராஜகிருத்தி, இந்திய குடியரசு கட்சி மாவட்ட தலைவர் கதிர்வேல், விடுதலை தமிழ் புலிகள் கட்சி சிதம்பரம் நகர செயலாளர் வாழ சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தமிழக அரசையும், நெய்வேலி என்எல்சி நிர்வாகத்தையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், விருத்தாசலம் காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து அருகிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
விருத்தாசலம் அருகே அருந்ததிய இன மக்களுக்கு கோவில் வழிபாட்டு உரிமை மறுப்பு – கண்டன ஆர்ப்பாட்டம் பரபரப்பு
Reviewed by D-Softech
on
November 10, 2025
Rating: 5
No comments
Thank you for your comments