Breaking News

விருத்தாசலம் அருகே புகையிலை பொருட்கள் கடத்தி வந்தவர் கைது – 25 கிலோ பறிமுதல்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பெண்ணாடம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.


அப்போது கோவிலூர் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை போலீசார் தடுத்து விசாரித்தனர்.

விசாரணையில், அவர் வேப்பூர் அருகே பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசு மகன் செல்வம் (49) என்பது தெரியவந்தது. 

இவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் போதை பாக்கு பொருட்களை பெண்ணாடம் கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றதாக தெரியவந்தது.


இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 25 கிலோ போதை பாக்குகள் மற்றும் புகையிலை பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பெண்ணாடம் சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


🎉 Great Indian Festival Deal

🌿🎉 Great Indian Festival Deal

10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now

Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!

🛒 Buy Now on Amazon

  
















No comments

Thank you for your comments