Breaking News

விருத்தாசலத்தில் கலைஞர் அறிவுசார் மையம் அடிக்கல் நாட்டு விழா 🎉


திமுக தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்கவும், துணை முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரில்கலைஞர் அறிவு சார் மையம்” அடிக்கல் நாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழா நகர மன்ற தலைவர் மருத்துவர் சங்கவி முருகதாஸ் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

🏗️ திட்ட மதிப்பு: சுமார் ₹1 கோடியே 92 லட்சம்
🏢 இடம்: விருத்தாசலம் 4-வது வார்டு, நாச்சியார்பேட்டை

இந்த விழாவில் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், நகராட்சி ஆணையாளர் காஞ்சனா, நகர செயலாளர் தண்டபாணி, நகர துணை செயலாளர் ராமு, ஒன்றிய செயலாளர் வேல்முருகன், வயலூர் கிருஷ்ணமூர்த்தி, ஆட்டோ பாண்டியன், வழக்கறிஞர் ரவிச்சந்திரன், 4-வது வார்டு கவுன்சிலர் முத்துக்குமரன் உள்ளிட்ட நகரமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.



🎊 இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் “கலைஞர் அறிவுசார் மையம்” விருத்தாசலத்தின் கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்திற்குப் பெரும் பங்காற்றும் என நம்பிக்கை தெரிவித்தனர்.


No comments

Thank you for your comments