Breaking News

விருத்தாசலத்தில் தமிழ்நாடு ஒலி ஒளி அமைப்பு தொழிலாளர்கள் நலச்சங்கம் துவக்கவிழா சிறப்பாக நடைபெற்றது!


 விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தனியார் திருமண மண்டபத்தில், தமிழ்நாடு ஒலி ஒளி அமைப்பு தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் விருத்தாசலம் கிளை துவக்க விழா மற்றும் மாநில சங்கத்துடன் இணைக்கும் முதலாம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.



விழா கௌரவ தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடந்தது. இதில் தலைவர் செல்வம், செயலாளர் சோமசுந்தரம், பொருளாளர் சுதாகர், கௌரவ தலைவர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சங்கத்தின் நோக்கங்கள் மற்றும் தீர்மானங்கள்

சிறப்பு விருந்தினராக தென் தமிழ்நாடு ஆலோசகர் செந்தில் கலந்து கொண்டு பேசும்போது,

“ஒலி ஒளி தொழிலாளர்கள் அனைவரும் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும். ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டால், அனைவரும் ஒன்று கூடி அவருக்கு உரிய நிவாரணத்தை பெற்று தர வேண்டும். தொழிலை பாதுகாப்பான முறையில் செய்ய அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். ஒற்றுமையே நம்மை உயர்த்தும்” என்று வலியுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

  • தமிழ்நாடு முழுவதும் ஒலி ஒளி அமைப்பு தொழிலாளர்கள் நலச்சங்கத்தில் அதிகளவில் உறுப்பினர்களை சேர்த்தல்.
  • அனைத்து நகரங்களிலும், கிராமங்களிலும் கிளைகளை அமைத்தல்.
  • சங்க உறுப்பினர்களை தமிழ்நாடு அரசு தொழிலாளர்கள் நல வாரியத்தில் இணைத்தல்,
  • இதன் மூலம் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு படிப்பு உதவித்தொகை உள்ளிட்ட அரசு நலத்திட்டங்களை பெறுதல்.
  • மாதாந்திர கூட்டம் நடத்தி உறுப்பினர்களின் குறைகளை கேட்டு தீர்வு காணல்.
  • உறுப்பினர் சந்தா தொகையை நேரம் தவறாது செலுத்துதல்.
  • நிதியை அதிகரித்து உறுப்பினர்கள் நலனுக்காக பயன்படுத்துதல்.
  • அனைத்து உறுப்பினர்களும் பாதுகாப்பாக மற்றும் ஒற்றுமையாக செயல்படுதல்.
  • கட்டணங்களையும் உறுப்பினர் விதிமுறைகளையும் ஒரே சீராக வைத்திருத்தல்.

மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு

இவ்விழாவில்,

மாநில காப்பாளர் ரங்கநாதன், மாநில தலைவர் ஆனந்தன், மாநில பொதுச் செயலாளர் அம்பத்தூர் ரங்கநாதன், மாநில துணைத் தலைவர் கஜபதி, மாநில பொருளாளர் பக்தவச்சலம், மாநில துணைச் செயலாளர் ஜெயமணி, மாநில ஆலோசகர்கள் குமார், சேகர், ஆனந்தன், சீதாபதி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

மேலும், விருத்தாசலம் கிளை தலைவர் செல்வம், செயலாளர் சோமசுந்தரம், பொருளாளர் சுதாகர், கௌரவத் தலைவர் குணசேகரன், சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மேற்கு, திருவள்ளூர் கிழக்கு, செங்கல்பட்டு, தென் சென்னை, விழுப்புரம், திருச்சி, சேலம், மயிலாடுதுறை, கடலூர், விருத்தாசலம் ஆகிய மாவட்டங்களிலிருந்து பல்வேறு சங்க உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

📰 செய்தியாளர்: R. காமராஜ் (9080215691)


No comments

Thank you for your comments