குமரகோட்டம் முருகன் கோயில் உண்டியல் காணிக்கை வரவு ரூ.24 லட்சம்
காஞ்சிபுரம், நவ.7:
கந்தபுராணம் அரங்கேற்றம் செய்யப்பட்ட பெருமைக்குரியது காஞ்சிபுரத்தில் உள்ள குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.
இக்கோயிலில் இருந்த 4 உண்டியல்கள் கடந்த 4.7.2025 ஆம் தேதிக்குப் பிறகு திறந்து எண்ணப்பட்டது.
இதில் ரூ.24,96,048 பணமாகவும், தங்கம் 18.60 கிராம்,வெள்ளி 782.100 கிராம் ஆகியன இருந்தது.
காஞ்சிபுரம் சரக உதவி ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் கோயில் செயல் அலுவலர் கேசவன் மற்றும் ஆய்வாளர் அலமேலு ஆகியோர் மேற்பார்வையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது.
No comments
Thank you for your comments