Breaking News

காஞ்சிபுரத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி


காஞ்சிபுரம், அக்.31:

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் அக்.27 ஆம் தேதி முதல் நவ.2 ஆம் தேதி வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது.இதனையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து தொடங்கிய பேரணியை ஆட்சியர் கலைச்செல்வி மோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


தொடக்க விழாவில் காஞ்சிபுரம் எஸ்பி கே.சண்முகம்,மாவட்ட வருவாய் அலுவலர் பா.முருகேசன்,ஊழல் தடுப்புப்பிரிவு டிஎஸ்பி கே.சி. கலைச்செல்வன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

ஆட்சியர் அலுவலகத்திலிருந்து தொடங்கிய பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மூங்கில் மண்டபம் பகுதியில் வந்து நிறைவு பெற்றது.

பேரணியில் கலந்து கொண்ட பல்வேறு பள்ளிகள், கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பலரும் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு பதாகைகளை கையில் வைத்திருந்தவாறு பங்கேற்றிருந்தனர். 

ஏற்பாடுகளை ஊழல் தடுப்புத்துறை ஆய்வாளர்கள் தேவநாராயணன்,  கீதா தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.

No comments

Thank you for your comments