Breaking News

எழுத்தாணி கலை இலக்கியக் கழகம் சார்பில் நூல் வெளியீட்டு விழா


காஞ்சிபுரம், நவ.17:

காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் எழுத்தாணி கலை இலக்கியக் கழகம் சார்பில் நூல் வெளியீட்டு விழா மற்றும் கவிஞர்களுக்கு அண்ணா விருது வழங்கும் விழா ஆகியன ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பெரியகாஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயில் அருகில் உள்ள ஐராவதீஸ்வரர் ஆலயத்தில் எழுத்தாணி கலை இலக்கியச் சங்கம் சார்பில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

கவிஞர் முரளி எழுதிய சிந்தனை வித்துக்கள் மற்றும் முத்துக்கள் மூன்று என்ற இரு புத்தகங்கள் வெளியிடப்பட்டன.விழாவிற்கு காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் உமாசங்கர் தலைமை வகித்தார்.

கவிஞர்.கூரம் துரை முன்னிலை வகித்தார்.விழாவில் கவிஞர்கள் திருமால்ராஜ் மற்றும் கலைச்செல்வி வெங்கடேசன் ஆகியோருக்கு அண்ணா விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.ஏற்பாடுகளை எழுத்தாணி அமைப்பின் நிர்வாகி ஹரிராசு செய்திருந்தார்.நிறைவாக செல்வம் நன்றி கூறினார்.

No comments

Thank you for your comments