Breaking News

அதிகாரிகள் உரிய நேரத்தில் வரவில்லையெனில் நடவடிக்கை - காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் எச்சரிக்கை


காஞ்சிபுரம், நவ.3:

குறை தீர்க்கும் கூட்டத்திற்கு வரக்கூடிய அதிகாரிகள் உரிய நேரத்தில் வரவில்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும் என திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பா.முருகேசன் எச்சரித்தார்.


காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் பா.முருகேசன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் க.ஆர்த்தி,ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) ச.ரவிச்சந்திரன்,மாவட்ட வழங்கல் அலுவலர் ப.விஜயகுமார், தனித்துணை ஆட்சியர்(சமூகப் பாதுகாப்புத் திட்டம்)பாக்கியலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மொத்தம் 393 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்று அவை அந்தந்த துறை சார்ந்த அரசு அலுவலர்களுக்கு அனுப்பி உடனடியாக தீர்வு காணுமாறும் கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து குறை தீர்க்கும் கூட்டத்திற்கு வரும் அதிகாரிகள் சரியான நேரத்திற்குள் கூட்ட அரங்கிற்குள் வந்து விட வேண்டும்.கோரிக்கை மனுக்கள் கொடுக்க வரும் பொதுமக்கள் அதிகாலையிலையே வந்து காத்திருக் கிகிறார்கள்.அவர்களது மனுக்களப் பெற்று, அது குறித்து உரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டால் யாரும் இல்லாமல் இருந்தால் பொதுமக்களுக்கு எப்படி பதில் சொல்ல முடியும்.

எனவே அதிகாரிகள் வாரம் தோறும் நடைபெறும் குறை தீர்க்கும் கூட்டத்துக்கு சரியான நேரத்திற்கு வந்து விட வேண்டும்.அவ்வாறு இல்லையெனில் வருகைப் பதிவேடு மூலம் கையொப்பம் பெற்ற பிறகே கூட்டத்துக்கு அனுமதிக்கப்படுவர் என்றும் எச்சரித்தார்.

இக்கூட்டத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு கணக்கெடுப்பு பணியை எவ்வாறு நடத்துவது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.












No comments

Thank you for your comments