Breaking News

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் உண்டியல் காணிக்கை வரவு ரூ.27.11 லட்சம்



காஞ்சிபுரம், நவ.14:

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் இருந்த 12 உண்டியல்கள் வெள்ளிக்கிழமை திறந்து எண்ணப்பட்டத்தில் மொத்தம் ரூ.27,11,585 பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் இருந்த உண்டியல்கள் கடந்த 19.6.2025 ஆம் தேதிக்குப் பிறகு 12 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.

பொது உண்டியல் 10,கோசாலை உண்டியல் 1,திருப்பணி உண்டியல் 1 என மொத்தம் 12 உண்டியல்கள் திறந்து பக்தர்கள்,பணியாளர்களால் ஆலயத்தின் செயல் அலுவலர் ப.முத்துலட்சுமி முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது.


பொது உண்டியலில் ரூ. 25,36,337,கோசாலை உண்டியலில் ரூ.97,848, திருப்பணி உண்டியலில் 77400 உட்பட மொத்தம் 27,11,585 காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்தனர்.

இது தவிர தங்கம் 150 மி.கிராம்,வெள்ளி 101.700 மி.கிராமும் பக்தர்களால் காணிக்கையாக  செலுத்தப்பட்டிருந்தது.  

உண்டியல் எண்ணும் பணியினை அறநிலையத்துறை  காஞ்சிபுரம் சரக உதவி  ஆணையர் கார்த்திகேயன்,  ஆய்வாளர் அலமேலு மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் முன்னிலையில் உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது.

 .📰 காஞ்சிபுரம் மாவட்ட தலைமைச் செய்தியாளர்:  E. ஜாபர் 




















No comments

Thank you for your comments