திட்டக்குடி அருகே வளைகாப்புக்கு சென்ற வேன் கவிழ்ந்து விபத்து – 10 பேர் படுகாயம்
கடலூர் :
சேலத்திலிருந்து திட்டக்குடி நோக்கி வளைகாப்பு விழாவில் கலந்து கொள்ள 22 பேருடன் வந்த வேன், முன்னால் சென்ற காரை முந்தும் முயற்சியில், ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்தார்.
இதனால் வேன், தேசிய நெடுஞ்சாலை நடுவிலுள்ள தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்தது. இதில் பயணித்த 8 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் உட்பட 10 பேர் பலத்த காயமடைந்தனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த இராமநத்தம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், அதே வாகனத்தில் இருந்த 12 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். விபத்தால் சில நேரம் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் போக்குவரத்தை சீர்செய்தனர்.
🌿🎉 Great Indian Festival Deal
10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now
Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!
🛒 Buy Now on Amazon
No comments
Thank you for your comments