Breaking News

விருத்தாசலம் திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி பட்டமேற்பு விழா: இரண்டு அமைச்சர்கள் கலந்து கொண்டு 1,171 மாணவர்களுக்கு பட்டம் வழங்கினர்


கடலூர் மாவட்டம், விருத்தாசலம் நகரில் அமைந்துள்ள திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமேற்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன், மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ. கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு மொத்தம் 1,171 மாணவர்கள் பெற்ற பட்டங்களை வழங்கினர்.



🎓 கல்லூரியின் வளர்ச்சி பாதை

1966ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த கல்லூரி, ஆரம்பத்தில் திருமுதுகுன்றம் ஆண்கள் உயர்நிலைப்பள்ளி கட்டிடத்தில் செயல்பட்டது. பின்னர் 1971ஆம் ஆண்டு தற்போது உள்ள நிலையான வளாகத்திற்கு மாற்றப்பட்டது. அப்போது பழமலைநாதர் திருக்கோயில் கல்லூரிக்கு 435 ஏக்கர் நிலத்தை மிகக் குறைந்த விலையில் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இக்கல்லூரி வரலாறு, தமிழ் இலக்கியம் போன்ற பாடப்பிரிவுகளுடன் தொடங்கியது. பின்னர் வணிகவியல் (1971), கணிதம் (1972-73), விலங்கியல் (1979-80), இயற்பியல் (1980-81), முதுகலை தமிழ் (1981), கணினி அறிவியல் (1997-98) உள்ளிட்ட பல புதிய பாடங்கள் தொடங்கப்பட்டன.

மார்ச் 2005ல் பல்கலைக்கழக தரநிர்ணயக் குழுவால் B+ தரம் வழங்கப்பட்டது. 2014 முதல் Grade-I கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது. 2016-17 கல்வியாண்டில் இக்கல்லூரி தனது பொன்விழா ஆண்டை கொண்டாடியது.



🌸 கல்லூரி சின்னத்தின் அர்த்தம்

கல்லூரியின் சின்னத்தில் இடம்பெற்றுள்ள யாழ், மலர், வேல், கோயில் ஆகியவை கல்வி, நற்பண்பு, தன்னம்பிக்கை மற்றும் பண்பாட்டை குறிக்கின்றன.
“உழைப்பே தெய்வம்” என்ற கோட்பாட்டை முன்வைத்து மாணவர்கள் உழைத்து உயரவேண்டும் என்ற செய்தியை இந்தச் சின்னம் வெளிப்படுத்துகிறது.



📚 கல்வி மற்றும் உதவித்தொகைகள்

இக்கல்லூரியில் தற்போது தமிழ், ஆங்கிலம், வரலாறு, நிர்வாகவியல், அரசியல் அறிவியல், கணிதம், வணிகவியல், பொருளியல், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், கணினி அறிவியல் உள்ளிட்ட 13 பிரிவுகளில் 4,425 மாணவர்கள் கல்வி கற்றுவருகின்றனர்.

இன்றைய பட்டமேற்பு விழாவில்,

  • இளநிலைப் பிரிவில் 1,098 மாணவர்கள்
  • முதுநிலைப் பிரிவில் 73 மாணவர்கள்
  • மொத்தம் 1,171 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

அத்துடன்,

  • பிற்படுத்தப்பட்டோர் கல்வி உதவித்தொகை – 2,048 மாணவர்கள்
  • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உதவித்தொகை – 1,372 மாணவர்கள்
  • தமிழ் வழியில் பயில்வோருக்கான உதவித்தொகை (₹900) – 802 மாணவர்கள்
  • தமிழ்ப்புதல்வன் திட்டம் – 691 மாணவர்கள்
  • புதுமைப்பெண் திட்டம் – 458 மாணவிகள்
  • நான் முதல்வன் திட்டம் – 4,500 மாணவர்கள் திறன்மேம்பாட்டு பயிற்சி பெற்றுள்ளனர்.

சிறப்பு விருந்தினர்கள்

இவ்விழாவில்,

  • கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. விஷ்ணுபிரசாத்
  • விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். இராதாகிருஷ்ணன்
  • மாவட்ட வருவாய் அலுவலர் ம. இராஜசேகரன்
  • விருத்தாசலம் நகர மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ்

  • கல்லூரி முதல்வர் முனைவர் ஆ. முனியன்
  • உட்பட பலரும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.

🎉 Great Indian Festival Deal

🌿🎉 Great Indian Festival Deal

10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now

Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!

🛒 Buy Now on Amazon

  

No comments

Thank you for your comments