Breaking News

நெற்கதிருடன் கூட்டாக வருகை தந்து சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த கிராம் மக்கள்


காஞ்சிபுரம் :

நெற்கதிருடன் கூட்டாக வருகை தந்து சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த கிராம் மக்கள் 

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த எச்சூர் கிராமத்தில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைகளில்  நெற்கதிருடன்  விவசாயத்தை மீட்போம் எனும் வாசகத்தை கைகளில் ஏந்தி  விவசாயிகள் மனு


காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் அடுத்த எச்சூர் ஊராட்சியில் 1000 க்கும் மேற்ப்பட்ட ஏக்கரில் விவசாயம் செய்யபட்ட வருகிறது.இந்த நிலையில் எச்சூர் ஊராட்சியில் உட்பட்ட A-Block மற்றும் B-Block-ல் உள்ள பயிர் செய்யும் நஞ்சை நிலங்களில் சிப்காட் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


பயிர்செய்யும் நஞ்சை நிலங்களை சிப்காட் நிறுவனம்  எடுத்துக் கொள்வதால் பொது மக்கள் அதிகம் பாதிக்கும் வகையிலும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் வகையிலும் உள்ளது.

இதனால் விவசாயம் செய்யும் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் பாதிக்காத இருக்க எச்சூர் நஞ்சை நிலங்களை சிப்காட் நிறுவனம் எடுக்ககூடாது என தொரிவித்து அக்கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கைகளில் நெற்கதிர்களுடனும், விவசாயத்தை காப்போம், விவசாய நிலத்தை மீட்போம் எனும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி ஊர்வலமாக காஞ்சிபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடைபெறும் மக்கள் நல்லுறவு கூட்டரங்கு நடைபெறும் இடத்திற்கு  வருகைதந்ததனர்.

இதனையெடுத்து காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தனித்தனியே அனைவரும் மனு அளித்து செல்ல உள்ளதாக தெரிவித்ததையெடுத்து பகுதி பகுதியாக ஐந்து பேர் அனுமதிக்கப்பட்டு மனு அளித்து சென்றனர்.

மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடைபெறும் கூட்டரங்கு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒரு நேரத்தில் குவிந்ததால் சற்றுநேரம் அப்பகுதியில் பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.



No comments

Thank you for your comments