Breaking News

தேசிய தன்னார்வ இரத்ததான தின நாள் விழாவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு பாராட்டு சான்றிதழ்


செங்கல்பட்டு:

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) காஞ்சிபுரம் மாவட்டத்தின் சார்பாக 2024–2025 ஆண்டில் 1,450-க்கும் மேற்பட்ட அவசர இரத்ததானங்கள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட இரத்ததான முகாம்கள் நடத்தப்பட்டதை பாராட்டி, அந்த அமைப்பிற்கு பாராட்டு சான்றிதழும் கேடயமும் வழங்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சினேகா IAS தலைமையில், செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய தன்னார்வ இரத்ததான தின விழாவில் இந்த பாராட்டு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், மாவட்ட மருத்துவரணி செயலாளர் சர்புதீன் TNTJ சார்பில் சான்றிதழையும் கேடயத்தையும் பெற்றுக்கொண்டார்.


அவசர காலங்களில் இரத்தம் வழங்கிய அனைத்து தானதாரர்களுக்கும் நன்றி தெரிவித்து, “எல்லாப் புகழும் இறைவனுக்கே; மக்கள் நலனுக்காக எப்போதும் செயல்படுவோம்” என TNTJ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

No comments

Thank you for your comments