Breaking News

காஞ்சிபுரம் பட்டாசுக்கடைகளில் அதிகாரிகள் குழு திடீர் ஆய்வு

காஞ்சிபுரம், அக்.17:

காஞ்சிபுரத்தில் உள்ள நிரந்தர மற்றும் தற்காலிக உரிமம் பெற்ற பட்டாசுக்கடைகளில் வருவாய்த்துறை மற்றும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் குழுவினர் வெள்ளிக்கிழமை திடீரென ஆய்வ மேற்கொண்டனர்.




தீபாவளிப்பண்டிகையையொட்டி காஞ்சிபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் நிரந்தர மற்றும் தற்காலிக பட்டாசுக்கடைகள் என மொத்தம் 27 கடைகளுக்கு மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தீபாவளிப் பண்டிகையையொட்டி பட்டாசுக்கடைகள் பட்டாசு விற்பனையும் அமோகமாக நடந்து வருகிறது.உரிமம் வழங்கப்பட்ட கடைகளில் தீயணைப்புக்கருவிகள் முறையாக செயல்படுகிறதா, உரிமத்தில் கூறியிருந்தபடி அக்கருவிகளை பொருத்தியிருக்கிறார்களா, பட்டாசுப்பெட்டிகளை பாதுகாப்பாக வைத்து விற்பனை செய்கிறார்களா என அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.


காஞ்சிபுரம் வட்டாட்சியர் ரபீக்,உதவி மாவட்ட தீயணைப்பு அதிகாரி சங்கர், தொழிலாளர் நல ஆய்வாளர் முருகன் ஆகியோர் காஞ்சிபுரம் பழைய ரயில் நிலைய சாலை, உலகளந்த பெருமாள் கோயில் தெரு, செவிலிமேடு ஆகிய பகுதிகளில் உள்ள பட்டாசுக்கடைகளில் தீடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

பட்டாசுகளை பாதுகாப்பாக விற்பனை செய்யுமாறும் வணிகர்களுக்கு அறிவுறுத்தினர்.

📰 காஞ்சிபுரம் மாவட்ட தலைமைச் செய்தியாளர்:  E. ஜாபர் 

🎉 Great Indian Festival Deal

🌿🎉 Great Indian Festival Deal

10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now

Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!

🛒 Buy Now on Amazon

  

  

No comments

Thank you for your comments