Breaking News

மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியினை கலெக்டர் கலைசெல்வி மோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

 காஞ்சிபுரம்  :

காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், இன்று (17.10.2025) மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.


ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர்-3-ம் நாள் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினவிழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு அனைத்து  நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினவிழா - 2025 டிசம்பர் 3 அன்று நடைபெறுவதை  முன்னிட்டு, நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியினை இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.


இவ்விளையாட்டு போட்டியில் அரசு மற்றும் சிறப்பு பள்ளிகளை சார்ந்த சுமார் 200 மாற்றுத்திறனாளி மாணவ / மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்  இரா. மலர்விழி,  மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமதி.கோ.சாந்தி, மாவட்ட உடற்கல்வி அலுவலர் (DIPE) திரு. முத்துவேல், மாற்றுத்திறனாளி மாணவ/மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

📰 காஞ்சிபுரம் மாவட்ட தலைமைச் செய்தியாளர்:  E. ஜாபர் 

🎉 Great Indian Festival Deal

🌿🎉 Great Indian Festival Deal

10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now

Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!

🛒 Buy Now on Amazon

  

  

No comments

Thank you for your comments