ஓரிக்கை அரசுப்பள்ளியில் கண்காணிப்பு கேமரா - எம்எல்ஏ சுந்தர் இயக்கி வைத்தார்
காஞ்சிபுரம், அக்.10:
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் தொகுதி காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 50 வது வார்டு ஓரிக்கையில் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்பள்ளிக் கட்டிடத்தை உத்தரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர் திறந்து வைத்திருந்தார்.
திறப்பு விழாவின் போது பள்ளி ஆசிரியர்கள் இப்பள்ளியின் விடுமுறை நாட்களில் பள்ளி வேலை நேரம் முடிந்த பின்பு சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும், அதனால் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டியது அவசியம் எனவும் எம்எல்ஏ க.சுந்தரிடம் கோரிக்கை வைத்தனர்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று காஞ்சிபுரம் மாநகராட்சி மண்டலக்குழுவின் தலைவர் சாந்தி சீனிவாசன் ஏற்பாட்டில் பள்ளி வளாகத்திற்குள் 8 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அதன் தொடக்க விழா நடைபெற்றது.
🌿 Jivada Kumkumadi Tailam – Ayurvedic Face Oil with Saffron & 28 Herbs
Brightens Skin ✨ | Anti-Ageing | Reduces Dark Spots, Wrinkles, Hyperpigmentation & Fine Lines | Suitable for All Skin Types | 30ml
🛒 Buy Now on Amazon
No comments
Thank you for your comments