ஆலப்பாக்கம் சித்தேரியில் வளர்ப்புக்காக 82 ஆயிரம் மீன்குஞ்சகளை விட்டார் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன்
காஞ்சிபுரம், அக்.29:
உத்தரமேரூர் ஒன்றியம் அன்னாத்தூர் ஊராட்சி ஆலப்பாக்கம் சித்தேரியில் மீன்வளத்துறை சார்பில் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டத்தின் கீழ் 82 ஆயிரம் மீன்குஞ்சுகள் ஏரியில் விடப்பட்டன.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் எம்பி க.செல்வம், எம்எல்ஏ க.சுந்தர் ஆகியோர் மீன்குஞ்சுகளை வளர்ப்புக்காக விட்டார்கள்.
இதன் பின்னர் ஆட்சியர் கூறுகையில் கிராமப்புறங்களில் மீன் உற்பத்தியை அதிகரித்திட மீனவர் நலத்துறை சார்பில் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளில் மீன்குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
உத்தரமேரூர் வட்டாரத்துக்கு உட்பட்ட 86.5 ஹெக்டேர் பரப்பளவில் ஆலப்பாக்கம் சித்தேரி, பினாயூர் ஏரி, எலப்பாக்கம் ஏரி,ரெட்டை மங்கலம் ஏரி ஆகிய ஏரிகளில் மொத்தம் 1,73,000 மீன் குஞ்சுகள் இருப்பு செய்யப்படுகிறது.
இதன் அடிப்படையில் ஆலப்பாக்கம் சித்தேரியில் 41 ஹெக்டேர் பரப்பளவில் 82 ஆயிம் மீன்குஞ்சுகள் இருப்பு செய்வதற்காக விடப்பட்டிருப்பதாகவும் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் க.ஆர்த்தி, மீனவர் நலத்துரை உதவி இயக்குநர் க.சசிகலா மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், மீன்வளத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
🌿🎉 Great Indian Festival Deal
10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now
Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!
🛒 Buy Now on Amazon
.
No comments
Thank you for your comments