காஞ்சிபுரம் சங்கரா பல்கலையில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு கலந்துரையாடல்
காஞ்சிபுரம், அக்.29:
காஞ்சிபுரம் மாவட்ட ஊழல் தடுப்புத்துறை சார்பில் சங்கரா பல்கலைக்கழக கூட்ட அரங்கில் மாணவர்களிடையே ஊழல் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
பல்கலையின் துணைவேந்தர் ஜி.சீனிவாசு தலைமை வகித்தார். பல்கலையின் நெறியாளர்கள் எம்.ரெத்தினக்குமார், கே.வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்கலையின் கணினி அறிவியல் துறை தலைவர் செந்தில்குமார் வரவேற்று பேசினார்.
ஊழல் தடுப்புத்துறை டிஎஸ்பி வே.கலைச்செல்வன், ஆய்வாளர்கள் தேவநாராயணன்,கீதா ஆகியோர் பல்கலையில் பயிலும் மாணவ, மாணவியர்க்கு ஊழலை தடுப்பது எப்படி என்ற தலைப்பில் பேசினார்கள்.
மாணவ,மாணவியரின் சந்தேகங்களுக்கும் ஊழல் தடுப்புத்துறை அதிகாரிகள் பதிலளித்தனர். வருங்கால தலைமுறையினரான மாணவர்கள் ஊழலுக்கு இடம் கொடுக்க கூடாது எனவும் அதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அதிகாரிகள் விளக்கினார்கள்.
நிறைவாக ஊழல் தடுப்புத்துறை டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையில் அதிகாரிகள், பேராசிரியர்கள்,மாணவர்கள் அனைவரும் இணைந்து ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர்.
🌿🎉 Great Indian Festival Deal
10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now
Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!
🛒 Buy Now on Amazon
.
No comments
Thank you for your comments