மங்களூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் பாம்பு கடித்த விவசாயி உயிரிழப்பு – உறவினர்கள் ஆம்புலன்ஸ் கண்ணாடி உடைத்து சாலை மறியல்
விருத்தாசலம், அக்டோபர் 29, 2025:
மங்களூர் பகுதியைச் சேர்ந்த செந்தில் (வயது சுமார் 40) என்ற விவசாயி இன்று மாலை வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது பாம்பு கடித்துள்ளது. மயக்கம் அடைந்த அவரை உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மங்களூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
அப்போது மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால், செவிலியர்கள் தொலைபேசி மூலம் மருத்துவரை தொடர்பு கொண்டதாகவும், மூன்று மணி நேரம் கழித்தே மருத்துவர் மருத்துவமனைக்கு வந்ததாகவும் உறவினர்கள் கூறுகின்றனர்.
இதற்குள் பாம்பு கடித்த விவசாயி செந்தில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், மருத்துவமனையின் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்ததாக கூறப்படுகிறது.
🌿🎉 Great Indian Festival Deal
10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now
Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!
🛒 Buy Now on Amazon
No comments
Thank you for your comments