காஞ்சிபுரத்தில் புதிய நகரப் பேருந்து சேவை துவக்கம்
காஞ்சிபுரம், அக். 11:
தி.மு.க கொள்கைப் பரப்புச் செயலாளர் மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. சி.வி.எம்.பி. எழிலரசன் அவர்களின் தொடர்ந்து வலியுறுத்தலின் பேரில், கடந்த 09.09.2025 அன்று காஞ்சிபுரம் வருகை தந்த மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் இந்த கோரிக்கை வைக்கப்பட்டது.
துணை முதலமைச்சரின் பரிந்துரையின்படி, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு. எஸ்.எஸ். சிவசங்கர் அவர்களின் உத்தரவின் பேரில், இன்று காலை 9.30 மணிக்கு காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் புதிய நகரப் பேருந்து சேவை துவங்கப்பட்டது.
இந்த இரண்டு வழித்தடங்களிலும் நகரப் பேருந்துகள் இப்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்படுகின்றன.
புதிய சேவையை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. சி.வி.எம்.பி. எழிலரசன் அவர்கள் பொதுமக்கள் முன்னிலையில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
No comments
Thank you for your comments