பெண்ணாடம் அருகே மர்ம மரணம் – ரத்த காயங்களுடன் கணவன்-மனைவி சடலம்! - கொலையா? தற்கொலையா? – போலீசார் தீவிர விசாரணை
மரணமடைந்தவர்கள் செல்வராஜ் (60), விவசாயி மற்றும் அவரது மனைவி இராமாயி (46). இவர்களுக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மகன் செல்வமணி சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார்.
அக்கம் பக்கத்தினர் தெரிவித்ததாவது —
“செல்வராஜ் அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்தார். கடந்த சில நாட்களாக வீட்டை வெளியே யாரும் காணவில்லை. மாலை வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது,” என கூறினர்.
உடனே கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலைய போலீசார் தகவல் பெற சம்பவ இடத்திற்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது செல்வராஜ் தூக்கிட்டு நிலையிலும், மனைவி இராமாயி ரத்தக் காயங்களுடன் தரையில் சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசார் இருவரின் உடலையும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மகன் செல்வமணி தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்து செவ்வாய்க்கிழமை மாலை சென்னை திரும்பியதாக தகவல். அதன்பின் தம்பதியரை யாரும் பார்த்திருக்கவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் பெண்ணாடம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
🌿🎉 Great Indian Festival Deal
10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now
Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!
🛒 Buy Now on Amazon
🌿 மேஷம் முதல் மீனம் வரை | குரு அதிசார பெயர்ச்சி பலன்கள்
குரு உச்சம் பெறுவதால் பாக்கியம் பெருகும்! | தெய்வ அருள் உங்களை தழுவும் ! | தவறாமல் படிக்கவும் ⚡
💛 புதிய தகவல் இதோ👆


No comments
Thank you for your comments